Designed by Iniyas LTD
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம் !
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது.
கடைசியாக 1993-ல் இலங்கை மண்ணில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா. அதன்பிறகு கடந்த 22 ஆண்டுகளாக வெல்லாத நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் வென்று அந்த குறையைத் தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது கோலி தலைமையிலான இளம் இந்திய அணி.
கடந்த போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் கேப்டனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த கோலி, இந்தப் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி கேப்டனாக ஒரு தொடரை வெல்வதில் மிகுந்த முனைப்போடு இருக்கிறார். 5 பவுலர்களுடன் களமிறங்குவது என்ற கோலியின் உத்திக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் கடந்த இரு போட்டிகளிலும் இலங்கையின் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்தது.
