தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சசிகலாவிற்கு எதிரான சசிகலா புஸ்பாவின் மனு ஒத்திவைப்பு!

1470983590-4847-2-450x369-1மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க தடை கோரி அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் சசிகலா புஷ்பா தொடர்ந்துள்ளார். அதில், சசிகலா நடராஜன் அதிமுக பொதுச் செயலாளராக வரக்கூடாது என்றும் கோரியுள்ளார்.

இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணையின் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பு விசாரணைக்காக வழக்கை நாளை மறுதினம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதால், இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள சசிகலா புஷ்பா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...