Designed by Iniyas LTD
A9 வீதியில் ஸ்ரீ விசேட அதிரடிப்படை வாகனம் மோதி விபத்து! போதகர் படுகாயம்
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் A9 பிரதான வீதியில் நேற்று மாலை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதியத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் படுகாயம் அடைந்து மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு திரும்ப முடப்பட்ட போதகரை எதிரில் அதிகவேகமாக வந்த விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஐந்து மீற்றர் தூரம்வரை இழுத்துச்சென்றதில் 17 ஆம் கட்டை ஒட்டுசுட்டானை சேர்ந்த 60 வயதுடைய போதகர் யாகோ அவர்களே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவரை மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பாக மாங்குளம் ஸ்ரீ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.