இந்தியாவில் வெப்பக்காற்றுக்கு ஆந்திரா, தெலங்கானா பகுதியில் 223 பேர் பலி!

இந்தியாவில் தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வீசி வரும் கடும் வெப்பக்காற்றுக்கு இதுவரை 223 பேர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து மே 22-ம் தேதி வரை தெலங்கானாவில் 73 பேரும், மே 18-ம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை ஆந்திராவில் 80 பேரும் வெயிலால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையிலும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் வெயிலுக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் அடிலாபாத், வாரங்கல், ஹைதராபாத், கம்மம், மஹாபூப்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பக்காற்று வீசுகிறது.

அதிகபட்சமாக கம்மம், நல்கொண்டா உள்ளிட்ட பகுதிகளில் 47 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் வெப்பக் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராதெலங்கானாவானிலை ஆய்வு மையம்வெப்பக்காற்றுவெயில்
Comments (0)
Add Comment