கிழக்கு நேபாளத்துக்கு உட்பட்ட பல பகுதிகள் மற்றும் காத்மாண்டு நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் கொண்ட புவியியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள நேபாளத்தில் கடந்த 2015-ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரிக்டர் அளவுகோலில் நான்காகவும் அதற்கு அதிகமாகவும் 475 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.