அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்த விசாரணையின்போது அந்த சிறுவன் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் புளுவேல் விளையாட்டின் ஒரு சவாலை முடிக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளான்.
இந்த கடிதம் கிடைத்த பின்னரே அந்த சிறுவன் புளுவேல் விளையாட்டு விளையாடிவந்தது அவனது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அதற்காக அவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கட்டிட தொழிலாளியின் கைபேசியை பயன்படுத்தியுள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.
நாட்டில் புளுவேல் விளையாட்டினால் ஏற்பட்டுவரும் தற்கொலைகளில் எண்ணிக்கை அதிகரித்துவருவதையடுத்து பெற்றோர்களுக்கு மாநிலப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.