அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்க உத்தரவு!

வட கொரியத் தலைவர் கிம் யொங் – உன், தனது நாட்டின் அணு ஆயு­தங்­களை எந்த நேரத்திலும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தயா­ராக வைத்­தி­ருக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊட­க­மான கொரிய மத்­திய செய்தி முகவர் நிலையம் (கே.சி.என்.ஏ) நேற்று வெள்­ளிக்கிழமை செய்தி வெளியிட்­டுள்­ளது.

தனது நாட்டின் இரா­ணுவ நிலைப்­பாட்டின் தயார் நிலையை பரி­சீ­லிப்­ப­தற்கு முன்­கூட்­டியே தாக்­கு­தல்­களை நடத்த தனது இரா­ணுவத் தலை­வர்­களை கிம் யொங் – உன் கோரி­யுள்­ள­தாக அந்த செய்தி முகவர் நிலையம் கூறு­கி­றது.

வட கொரி­யாவின் அண்­மைய அணு­சக்திப் பரி­சோ­தனை மற்றும் ஏவு­கணை ஏவும் நட­வ­டிக்கை என்­பன தொடர்பில் அந்­நாட்­டுக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் சபை புதிய கடு­மை­யான தடை­களை விதித்­த­தை­ய­டுத்தே கிம் யொங் – உன் இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

அத்­துடன் வட கொரியா வியா­ழக்­கி­ழமை 6 ஏவு­க­ணை­களை ஏவிப் பரி­சோ­தனை செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் இரா­ணுவப் பயிற்­சி­யொன்றின் போது உரை­யாற்­றிய கிம் யொங் – உன், “வட கொரி­யாவின் இருப்பு நிலைக்கு எதி­ரிகள் அச்­சு­றுத்­த­லாக உள்­ளனர். அதனால் நாங்கள் எப்­போதும் எந்த நேரத்­திலும் அணு ஆயு­தங்­களைப் பிர­யோ­கிக்க தயா­ராக இருக்க வேண்­டி­யுள்­ளது” என தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­கா­வா­னது ஏனைய நாடுகள் மீதும் மக்கள் மீதும் போரைக் கட்­ட­விழ்த்து விட வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் எமது இறை­மையையும் வாழ்­வ­தற்கு எமக்­குள்ள உரி­மையையும் பாது­காப்­ப­தற்கும் எமது அணு­சக்தி ஆற்­றலை ஊக்­கு­விப்­ப­தே ஒரே வழி­யா­க­வுள்­ளது” என அவர் கூறி­ய­தாக கே.சி.என்.ஏ குறிப்­பிட்­டுள்­ளது.

வட கொரியா இவ்­வாறு அச்­சு­றுத்­தல்­களை விடுப்­பது வழ­மைக்கு மாறான ஒன்­றல்ல என்ற போதும் அந்­நாடு ஏவு கணையொன்றைப் பயன்படுத்தி ஏவக்கூடிய சிறிய அணு ஆயுதமொன்றை விருத்தி செய்யக்கூடிய ஆற்றலைக் கொண் டுள்ளதா என்பது குறித்து மேற்குலக நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

அணுவாயுதம்தயார்தலைவர்வட கொரியா
Comments (0)
Add Comment