அரபுலகத் தலைவர்கள் கூட்டு இராணுவப் படை ஒன்றை உருவாக்க இணக்கம்

அரபுலகத் தலைவர்கள் கூட்டு இராணுவப் படை ஒன்றை உருவாக்க இணங்கியுள்ளதாக எகிப்திய அதிபர் அப்துல் ஃபட்டா அல் -ஸீஸீ கூறுகின்றார்.

பிராந்தியத்தில் எதிர்நோக்கப்படும் ‘எதிர்பாராத அச்சுறுத்தல்களுக்கு’ முகம்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த இராணுவப் படையை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யேமனில் நிலவும் குழப்பங்கள் தொடர்பில் பெரும்பாலும் ஆராயப்பட்ட அரபு லீக் மாநாட்டில் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.

யேமனில் தற்போது ஹெளதி- ஷியா முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு அரபுப் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

ஹௌதிகள் ஆயுதங்களை மீள கீழே வைத்துவிட்டு அவர்கள் கைப்பற்றியிருக்கும் நிலப்பகுதியிலிருந்து வெளியேறும்வரை தங்களின் படைநடவடிக்கை தொடரும் என்று அரபு லீக் கூறியுள்ளது.

யேமனில் ஹௌதி இலக்குகள் மீது நான்காவது இரவாக சவுதி தலைமையிலான வான்தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துள்ளன.

அதிபர்அரபுலகத்அரேபியாஆராய்வுஇணக்கம்இராணுவப்படைஉருவாக்கம்எகிப்தியஏமான்கூட்டுசவுதிதலைவர்கள்பிராந்தியம்மாநாடு
Comments (0)
Add Comment