இதனால் ஏரிகாவின் 25 வது வயதில் அவரின் பெற்றோர்கள் ஏரிகாவிற்கு திருமணம் செய்ய நினைத்து மாப்பிள்ளை தேடினர். ஏரிகாவின் பழக்கத்தை தெரிந்து கொண்டு யாரும் அவரை திருமணம் செய்ய முன்வரவில்லை. ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தை கைவிட ஏரிகா கார்சா பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பாலி நாட்டை சேர்ந்த வில்லோ நெல்சன் என்ற நபர் ஏரிகாவை அந்த பழக்கத்திலிருந்து மீட்க மருத்துவ உதவிகள் செய்து உதவினார். பின்னர் ஏரிகாவுக்கும் வில்லோவும் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து ஏரிகா தனது 32 வது வயதில் வில்லோ நெல்சனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்பொழுது குழந்தை பிறந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தன்னைப் போல் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார் ஏரிகா கார்சா.