அப்போது கூட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள், சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க செய்தனர். இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கூட்டத்தினர் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.
தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.
அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்களை கொன்று குவித்ததற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.