இதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். வசம் இருந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
இந்நிலையில், 45 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த இரண்டே ஆண்டுகளில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
அந்த படையினர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அதிகாரப்பூர்வமாக ஐ.எஸ் அமைப்பானது 25 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவை ஈராக் மற்றும் சிரியாவில் இழந்துள்ளது. அது ஈராக்கில் 50 சதவீதமும், சிரியாவில் 20 சதவீதமும் இருக்கும்.
ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை கடுமையான சண்டையிட்டுள்ளது.
45 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த இரண்டே ஆண்டுகளில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் கடந்த 11 மாதத்தில் 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பாக 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.