இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை செலுத்தி வந்த தற்கொலைக் குண்டுதாரி தலைநகரின் வடக்கே தாஜி நகரிலுள்ள மேற்படி தொழிற்சாலையின் நுழைவாயிலில் வெடிக்க வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து குண்டுகள் பொருத்தப்பட்ட மேலங்கிகளை அணிந்திருந்த சுமார் 6 தற்கொலைக் குண்டுதாரிகள் தொழிற்சாலைக்குள் பிரவேசித்து பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலில் பொலிஸார் தரப்பில் 15 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.