இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் ஹைதர் அல் – அபடி, மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையொன்றை அங்கீகரிப்பதற்கான காலக்கெடுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதகுருவான மொக்தடா சாட்ரின் ஆத ரவாளர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கனமான கொங்கிறீட் மதில் சுவர்களில் ஏறி அதி பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்துள்ளனர்.
மேற்படி எதிர்ப்பு நடவடிக்கையையடுத்து பாக்தாத்தில் அவசரகால நிலைமையொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய பாக்தாத்திலுள்ள அந்த வலயத்தில் ஜனாதிபதி மாளிகை, பிர தமர் அலுவலகம் மற்றும் பல நாடுகளின் தூதரகங்கள் என்பன அமைந்துள்ளன.
இந்நிலையில் அங்கிருந்த அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் கூடி யிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முகமாக கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர்களது கார்கள் மீது பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து சனிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரா ளுமன்றத்துக்கு வெளி யில் முகாமிட்டிருந்த தாகவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் அவர்களில் பலர் அங்கு தொடர்ந்து தங்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் அந்நாட்டு பிரதமர் தெரிவிக்கையில், பாக்தாத் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
முதல் நாள் சனிக்கிழமை பாக்தாத்திற்கு அண்மையில் ஷியா யாத்திரிகர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் பலியானதுடன் 38 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நஹரவன் பிராந்தியத்தில் இடம் பெற்ற இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ள னர்.
3தொன் வெடிபொருட்களை கொண்ட வாகனமொன்றைப் பயன்படுத்தி தற்கொலைக் குண்டுதாரியொருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.