ஈராக் பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு! 50 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள் ஷியா சத்ர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் இருந்து குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் பலியானார்கள். 60 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த் குண்டுவெடிப்பில் அருகில் உள்ள கார்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அமைப்புஈராக்கட்டிடம்கார்குண்டுபடுகாயம்பலிபாக்தாத்
Comments (0)
Add Comment