மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியா, கினியா போன்ற நாடுகளில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது, இதுவரை சுமார் 1900 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நோயை முற்றிலும் ஒழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியது, எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலியாகி உள்ளனர். சியாரா லியோன், லைபீரியா பகுதிகளில் இந்நோயின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்நோயை கட்டுப்படுத்த விரைவில் ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நோய் கட்டுப்பாட்டு நிபுணர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் விரைவில் ஜெனீவாவில் நடக்கவிள்ளது எனத் தெரிவித்துள்ளார்.