இதனால் கையும் களவுமாக சிக்கிய அந்த பணிப்பெண்ணை அங்காடி நிர்வாகத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்ததுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் அளித்தனர். அதன்பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் கனடா புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் அவர் தவறிழைத்தது உறுதியானால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தன்யால் ஜிலானி தெரிவித்தார்.