கம்யூனிஸ்டுக்கு ஆதரவாக கன்னையா மேற்கு வங்க தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வார்: சீதாராம் யெச்சூரி

ஜேஎன்யு மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில், இடதுசாரிக் கட்சியை ஆதரிக்கும் மாணவர்கள் அனைவரும் கன்னையாவுடன் இணைந்து பணியாற்றுவார்கள். முதல் முறையாக, இடது சாரிகளின் இளைஞர்களின் சக்தியை தேசம் பார்க்க உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புத் தலைவரான கன்னையா குமார் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.

கன்னையாகம்யூனிஸ்ட்சீதாராம் யெச்சூரிபிரசாரம்மேற்கு வங்க தேர்தல்
Comments (0)
Add Comment