ஏற்கனவே சிரியாவுக்குச் சென்றிருந்த சிறுமி ஒருத்தியைப் பற்றி அறிந்துகொள்வதற்காக, குறித்த சிறுமிகள் மூவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸார் பெற்றோரிடம் அனுமதி கேட்டு எழுதியிருந்தனர்.
அந்தக் கடிதங்களை அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பாமல், அந்தச் சிறுமிகளின் கைளிலேயே பொலிஸார் கொடுத்துள்ளனர். அந்தக் கடிதங்களை அந்தச் சிறுமிகளும் மறைத்துள்ளனர்.
ஆனால், அந்தச் சிறுமிகள் நாட்டைவிட்டு வெளியேறவுள்ளார்கள் என்பதற்கான எந்தவிதமான சமிக்ஞைகளும் வெளிப்பட்டிருக்கவில்லை என்றே புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.