1999ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் சந்திரிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர், தனது ஒரு கண் பார்வையை இழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி, தாக்குதலில் தொடர்புடைய குற்றச்சாட்டில் வேலாயுதன் வரதராஜா என்பவருக்கு 290 ஆண்டுகளும், சந்திரா ஐயர் என்பவருக்கு 300 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.