ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானத்திற்கு எதிராக பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடிக்கும் நோக்கில் இலங்கைக்கு ஆதரவளிக்க சில நாடுகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளன. சில நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும். இலங்கை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மண்டியிட்டு படைவீரர்களை தூக்குமேடைக்கு அனுப்பி வைக்கத் தயாரில்லை எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.