ஜனவரியில் உள்நாட்டு விசாரணை தொடங்கும்: இலங்கை அரசு

இலங்கையில் உள்நாட்டு போர்க்குற்ற புகார் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் உள்நாட்டு விசாரணை தொடங்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச ஒத்துழைப்புடன் இந்த விசாரணை நடத்தப்படும் என்றார். ஒன்றரை ஆண்டுக்குள் இந்த விசாரணை நிறைவடையும் என்றும் பல்வேறு கட்டங்களாக விசாரணை முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

 இந்த விசாரணை தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வரும் அக்டோபர் மாதம் 4 அம்ச திட்டம் வகுக்கப்படும் என்று மங்கள சமரவீர தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே தவறிவிட்டதாகவும் அவரது உத்தரவுகளை பின்பற்றியதால்தான் இலங்கை ராணுவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் சமரவீர கூறினார்.

இலங்கை ராணுவம்உள்நாட்டு விசாரணைபோர்க்குற்றம்மங்கள சமரவீரராஜபக்சே
Comments (0)
Add Comment