திருகோணமலையில், இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஒன்று பிறந்துள்ளது. கிண்ணியா, குட்டிக்கராச்சி பகுதியில் நேற்றுமுன்தினம் பிறந்துள்ள இந்த இரண்டு தலை எருமைக் கன்று ஆரோக்கியத்துடன் இருப்பதாக, அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதிசயமாக இரண்டு தலைகளுடன் பிறந்துள்ள இந்த எருமைக் கன்றை பெருமளவான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.