நீண்ட தூர ஏவுகணையை ஏவியது வடகொரியா!

வட கொரி­யா­வா­னது நீண்ட தூரம் பய­ணிக்கக் கூடிய ஏவு­க­ணையை வெற்­றி­க­ர­மாக ஏவி­யுள்­ள­தாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­வித்­துள்­ளது.

அந்­நாட்­டிற்கு ஏவு­க­ணையை ஏவிப் பரி­சோ­தனை செய்­வ­தற்கு தடைவிதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த நட­வ­டிக்­கைக்கு ஜப்பான், தென் கொரியா, அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா உள்­ள­டங்­க­லான உலக நாடுகள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

வட கொரியா மேற்­படி ஏவு­கணை மூலம் செய்­ம­தி­யொன்றை விண்­வெ­ளிக்கு வெற்­றி­க­ர­மாக அனுப்­பி­யுள்­ள­தாக அந்­நாட்டு தொலைக்­காட்சி ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இந்த ஏவு­கணை ஏவப்­பட்­டமை தொடர்பில் கலந்­து­ரை­யாட ஐக்­கிய நாடுகள் சபை அவ­சரக் கூட்­ட­மொன்­றுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

வட கொரி­யாவின் இந்த நட­வ­டிக்கை பிராந்­தி­யத்தின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­க­வுள்­ள­தாக குறிப்­பிட்ட தென் கொரியா, தனது பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்க ஏவு­கணை எதிர்ப்பு முறை­மையை ஸ்தாபிப்­பது குறித்து அந்­நாட்­டுடன் கலந்­து­ரை­யா­டலை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கி­றது.

வட கொரி­யா­வி­ட­மி­ருந்­தான அச்­சு­றுத்­தலை உல­கி­லேயே அதி முன்­னேற்­ற­க­ர­மான மேற்­படி ‘தாட்’ ஏவு­கணை எதிர்ப்பு முறை­மையை ஸ்தாபிப்­பதன் மூலம் மட்­டுமே முறி­ய­டிக்க முடியும் என தென் கொரிய சிரேஷ்ட பாது­காப்பு அதி­கா­ரி­யான ரயு ஜி- – ஸெயுங் தெரி­வித்தார்.

வட கொரி­யாவின் வட பையொங்கன் மாகா­ணத்­தி­லுள்ள சொஹே விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து பூவு­லகை அவ­தானிப் ­ப­தற்­கான கவாங்­மை­யோங்கோங் -– 4 செய்­மதி ஏவப்­பட்டு 10 நிமிட நேரத்தில் பூமி யின் சுற்றுவட்டப் பாதையில் வெற்­றி­க­ர­மாக நிலைநிறுத்­தப்­பட்­ட­தாக வடகொரிய தேசிய விண்­வெளி அபி­வி­ருத்தி நிர்வாக அமைப்பால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை கூறு­கி­றது.

வட கொரிய தலைவர் கிம் யொங் உன்னின் உத்­த­ரவின் பேரி­லேயே இந்த செய்­ம­தியை ஏவும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் எதிர்­கா­லத்தில் மேலும் பல செய்­ம­தி­களை ஏவத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் வட கொரிய ஊட­கங்கள் தெரி­விக்­கி­ன்­றன.

இந்த ஏவு­கணை ஏவும் நட­வ­டிக்கை போர் கப்ப­லொன்றின் மூலம் வழி­ந­டத்­தப்­பட்­ட­தாக தென் கொரிய பாது­காப்பு அமைச்சு தெரி­விக்­கி­றது. மேற்­படி ஏவுகணை ஏவும் செயற்­பாட்­டுக்கு சர்­வ­தேச சமூகம் கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது.

இந்த ஏவு­கணை ஏவப்­பட்­டமை ஐக்­கிய நாடுகள் தீர்­மா­னத்தை மீறும் செயல் என அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் ஜோன் கெரி கூறினார்.

வட கொரி­யாவின் செயற்­பா­டுகள் கவலை தரு­வ­தாக உள்­ள­தென குறிப்­பிட் டுள்ள சீனா, இதனால் கொரிய தீப­கற்­பத்தில் மேலும் பதற்­ற­நிலை அதி­க­ரிப்பதை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

வட கொரி­யாவின் இந்த ஏவு­கணை ஏவும் நட­வ­டிக்கை அமெ­ரிக்க நியூ­ஹம்­ஷி­ யரில் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­க­ளிலும் செல்­வாக்குச் செலுத்­தி­யுள்­ளது. இந்தப் பிரச்­சி­னைக்கு சீனாவே தீர்வுகாண வேண்டும் என குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த சர்ச்­சைக்­கு­ரிய வேட்­பாளர் டொனால்ட் டிரம்ப் தெரி­வித்தார்.

அதேசமயம் அந்தக் கட்சியைச் சேர்ந்த பிறிதொரு வேட்பாளரான ஜெப் புஷ், வட கொரியா மீதான தாக்குதல் ஒன்றுக்கு மறுக் கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அத்த கைய தாக்குதல் ஒன்று எமது பாதுகாப்பிற்கு அவசியமானால், அது மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வட கொரியா இதற்கு முன் 2012 ஆம் ஆண்டில் நீண்டதூரம் பயணிக்கக்கூடிய ஏவு கணையொன்றை ஏவிப் பரிசோதித்தது.

ஏவியதுஏவுகணையைநீண்ட தூரவடகொரியா
Comments (0)
Add Comment