நெல்சன் மண்டேலா எழுதிய நினைவுக்குறிப்புகள் புத்தகமாக பிரசுரமாகிறது

தென்னாப்ரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின் முதல் அதிபராக தான் வகித்த பதவிக்காலம் பற்றி, நெல்சன் மண்டேலா எழுதிய நினைவுக்குறிப்புகள் அவரது மறைவுக்குப் பின்னர், அடுத்த ஆண்டு புத்தகமாக பிரசுரமாகிறது.

அவர் ஏற்கனவே எழுதி பெரிய எண்ணிக்கையில் விற்ற சுயசரிதையான , “’A Long Walk to Freedom” என்ற நூலின் தொடராக அமையவிருக்கும் இந்தப் புத்தகம், நெல்சன் மண்டேலாவின் கையெழுத்து வரைவின் அடிப்படையில் அமைந்திருக்கும். இந்த கையெழுத்து வரைவின் அடிப்படையில், மண்டேலாவின் ஆலோசகர்கள், இந்த புத்தகத்துக்கு இறுதி வடிவம் தருவார்கள்.

மண்டேலா தனது ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட சிரமங்களையும், சமகால தென்னாப்பிரிக்காவில் நிலவும் பிளவுகளையும் பற்றி வெளிப்படையாக்க் கூறும் ஒரு புத்தகமாக இது அமையும் என்று இதன் வெளியீட்டாளர்களான,பான் மாக்மில்லன் தெரிவிக்கிறது. நெல்சன் மண்டேலா 2013 டிசம்பரில் காலமானார்.

அதிபர்ஆட்சிஎழுதுதல்தென்னாபிரிக்காநிறவெறிபதவிபிரசுரம்புத்தகம்மறைவுமுடிவு
Comments (0)
Add Comment