நைஜீரியாவின் டமஸ்கஸ் நகரில் 70க்கும் அதிகமான மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. இந்த நகரம் கடந்த ஒரு மாத காலமாக போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இதனை இன்றையதினம் நைஜர் மற்றும் சாட் துருப்பினர் அடங்கிய குழு மீட்டிருந்தது. இதன் பின்னர் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை அந்த நகரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போக்கோ ஹராமினால் கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.