அந்தப் பெண்களுக்கு தமது குழு வைச் சேர்ந்த உறுப்பினர்களை தற்காலிகமாக திருமணம் செய்வதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தீவிரவாதிகளின் வேண்டுகோளை ஏற்க மறுத்த அந்தப் பெண்களுக்கு தீவிரவாதிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குர்திஷ் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிகாரியான செய்த் மமுஸினி, அஹ்லுல்பாயத் செய்தி முகவர் நிலையத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மொசூல் பிராந்தியமானது 2014 ஆம் ஆண்டிலிருந்து தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.