தென் கிழக்கு சீனாவில் ஸின்யு நகரில் ஜியாங்ஸி பொறியியல் நிறுவகத்துக்கு அருகிலுள்ள வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை குறிப்பிட்ட பெண்மணி உடல்நலப் பாதிப்பால் கீழே விழுந்து இறந்துள்ளார்.
இந்நிலையில் அவரால் கடந்த பல வருடங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த 8 தெரு நாய்களும் அவரைச் சூழ்ந்திருந்து 6 மணித்தியாலமாக நகராது காவல் காத்துக் கொண்டிருந்துள்ளன.
எவரது உதவியுமின்றி தனித்து வாழ்ந்த அந்தப் பெண்மணி, அந்தத் தெருநாய்களை தனது பிள்ளைகள் போன்று அன்பு காட்டி பராமரித்து வந்துள்ளார் அவர் குப்பை சேகரிப்பதன் மூலம் தனக்குத் தேவையான வருமானத்தை ஈட்டிவந்ததாக கூறப்படுகிறது.
காலை 4.00 மணியிலிருந்து 10.00 மணி வரை கவனிப்பாரற்று அவரது சடலம் வீதியில் கிடந்துள்ளது.
இந்த சம்பவம் அந்நாட்டு பொலிஸார தும் அவசரசேவைப் பிரிவினரதும் அலட்சியப்போக்கு தொடர்பில் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.