நேற்றுமுன்தினம், விமான நிலையத்துக்கு ஒரு வாடகைக் காரில் வந்த 3 தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த பயணப் பொதிகளை வெவ்வேறு ‘தள்ளு வண்டிகளில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்துள்ளன.
முதலில் 3 பேர்களில் இருவர் மட்டும் பைகளில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இன்னொருவன் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்காமல் அங்கிருந்து ஓடியிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் பெல்ஜியம் காவல்துறை நாஜிம் லாச்ரோவி என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர். ஆண்டர்லெச்ட் மாவட்டத்தில் நாஜிம் கைது செய்யப்பட்டுள்ளான். விமான நிலைய சி.சி.சி.டி. கேமராவில் பதிவான மூன்று நபர்களில் ஒருவன் நாஜிம் லாச்ரோவி என்பது குறிப்பிடத்தக்கது. நாஜிமின் கைது, இந்த தாக்குதலில் தொடர்ப்புடையவர்களை கண்டுபிடிக்க உதவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் கடந்த செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட காலித், பிராஹிம் எல் பக்ராவி ஆகிய இருவரும் குற்றப் பின்னணி கொண்ட சகோதரர்கள் என அந்நாட்டின் அரசு செய்திகள் தெரிவித்துள்ளது. காலித் பெல்ஜிய தலைநகர் பிரஸல்ஸில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டில் கடந்த வாரம்தான் பொலிஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர் என்றும் அந்த செய்தித் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வீட்டில் ஐ.எஸ். கொடி, சில துப்பாக்கிகள் மற்றும் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட பாரிஸ் தாக்குதல் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சலா அப்டேஸ்லாமின் கைரேகை ஆகியன பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஸல்ஸ் விமான நிலைய இரகசிய கெமராவில் பதிவான காட்சிகளில் காலிதும் அவரது சகோதரர் எல் பக்ராவியும் நடந்துவரும் காட்சிகள் பதிவாகி உள்ளது. மூன்றாவது நபரான நஜீம் லாச்ரோவியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான சலா அப்துஸ்ஸலாம் என்ற தீவிரவாதியை பிடிக்க பிரஸல்ஸ் நகரில் சில சந்தேகத்துக்குரிய வீடுகளில் பொலிஸார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அவற்றில் ஒரு வீட்டில் குடியிருந்த காலித் பக்ரோவி மற்றும் அவனது தம்பியான பிராஹிம் அல் பக்ரோவி ஆகியோர் நேற்றுமுன்தினம் ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என பெல்ஜியம் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே சில குற்றச்செயல் வழக்குகளில் தொடர்புடைய வர்கள், எனினும், இவர்கள் மீது தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான எந்த குற்றச் சாட்டும் இதற்கு முன் னர் வந்ததில்லை எனவும் அந்த செய்தி கள் குறிப்பிடுகின்றன.