மாலத்தீவில் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

மாலத்தீவில் குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் அடுத்த 30 நாட்கள் வரை அவசரநிலை பிரகடனம் நடைமுறையில் இருக்கும் என மாலத்தீவு அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

 இந்தியாவின் தென்மேற்கே அமைந்துள்ள மாலத்தீவு நாட்டில், அண்மையில் அதிபரை கொல்ல சதி நடந்தது. இதுதொடர்பாக துணை அதிபர் கடந்த 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

 அதேநேரத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி ஒன்றையும் உல்லாச விடுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

 தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், மாலத்தீவு நாட்டில் தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணியும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவசரநிலை பிரகடனம்போராட்டங்கள்மாலத்தீவுரோந்துப் பணிவெடிகுண்டுகள் கண்டெடுப்பு
Comments (0)
Add Comment