ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டிபிஸ் நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரானை சேர்ந்த ஒரு நிறுவனம் அமைத்து வருகிறது.
இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த மின் உற்பத்தி நிலையத்துக்குள் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர். தங்கள் உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை அவர்கள் வெடிக்க வைத்ததில் 16-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் டிபிஸ் நகர மேயர் அப்துல்லா நூருதீன் அல்-சலேஹி தெரிவித்துள்ளார்.