மூன்றாவது மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பிய தாயும் குழந்தைகளும்!

தென் கொரியாவின் பியாங்டேக் பகுதியில் நான்கு மாடி கட்டடம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. கட்டடத்தில் இருந்த சிலர் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இதில், 4-வது மாடியின் ஒரு அறையில் தாயும், 3 குழந்தைகளும் சிக்கிக் கொண்டனர். ஜன்னல் வழியாக கீழே உள்ளவர்களிடம் அந்த தாய் உதவி கேட்டு கத்தினாள். கீழே இருந்தவர்கள் குழந்தைகளை வெளியே எறியும் படி கூறினர்.

இதையடுத்து 3 குழந்தைகளையும் கீழே எறிந்த தாய், அதனை தொடர்ந்து தானும் கீழே குதித்தாள். அனைவரும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்க இராணுவ வீரர்கள் இவர்களை காப்பாற்றியுள்ளனர். இந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.

 

 

கட்டிடம்குழந்தைகள்தாய்தீ விபத்துதென்கொரியாநான்கு மாடி
Comments (0)
Add Comment