ரஷ்ய பெண்ணுக்கு ஐ எஸ் ஆல் மரணதண்டனை விதிப்பு!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தமது தீவி­ர­வாத குழுவில் கடந்த 4 வரு­டங்­க­ளா­க­ ம­றை­மு­க­மாக இணைந்து பணி­யாற்­றிய ரஷ்ய பெண் உள­வா­ளி­யொ­ரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.

எல்­விரா கரேவா என்ற மேற்­படி பெண் உள­வாளி ரஷ்­யாவின் கோகஸஸ் பிராந்­தி­யத்தில் செயற்­படும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் வளா­கத்­துக்குள் ஊடு­ருவி தீவி­ர­வா­திகள் தொடர்­பான உளவுத் தக­வல்­களை பல வருட கால­மாக ரஷ்ய புல­னாய்வுப் பிரி­வுக்கு வழங்கி வந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவர் வழங்­கிய தகவல்கள் கார­ண­மாக தமது குழுவைச் சேர்ந்த 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர். அவர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆள­டை­யா­ளங்கள், அவர்கள் பதுங்­கி­யுள்ள இடங்கள் மற்றும் தளங்கள் என்­பன தொடர்­பான தக­வல்­களை வழங்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் அவ­ரது மர­ண­தண்­டனை நிறை­வேற்றம் தொடர்­பான செய்தி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ரஷ்ய மொழி இணை­யத்­த­ள­மான ஐஸ்­ரொக் கில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

“எல்­விரா எமது சகோ­தர, சகோ­த­ரிகள் தொடர்­பான தக­வல்­களை ரஷ்ய புல­னாய்வுப் பிரி­வுக்கு வழங்கி காட்டிக் கொடுப்­ப­வ­ராக செயற்­பட்­டுள்ளார்.

”அவர் வெட்­க­மின்றி ஜிஹா­தி­களின் நம்­பிக்­கையைப் பெற்று அவர்கள் மத்­தியில் ஊடு­ருவி திரை­ம­றைவில் அவர்­க­ளது இடங்கள் மற்றும் தொடர்­புகள் தொடர்­பான தக­வல்­களைப் பெற்று வழங்கி அவர்கள் வேட்­டை­யா­டப்­பட வழி­வகை செய்­துள்ளார்” என அந்த இணை­யத்­த­ளத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் தான் ஏமாற்றி திரு­மணம் செய்த ஐ.எஸ். தீவி­ர­வாத குழு உறுப்­பி­ன­ரான அபு முஸ்­லிம்மை நஞ்­சூட்டி படு­கொலை செய்­துள்­ள­தாக தீவி­ர­வா­தி கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

எல்­விரா ரஷ்ய புலனாய்வுப் பிரிவினருக்காக தான் பணியாற்றுவதை ஒப்புக்கொள்வதை வெளிப் படுத்தும் ஒலிநாடாவொன்றை ஐ.எஸ். தீவிர வாதிகள் கைப்பற்றியதையடுத்தே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

உளவாளிஐ எஸ் அமைப்புதீவிரவாதம்புலனாய்வுபெண்மரணதண்டனைரஷ்யா
Comments (0)
Add Comment