லிபியாவில் உளவு பார்த்த மூவருக்கு மரண தண்டனை!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், சக்­கர நாற் ­கா­லியில் அமர்ந்­தி­ருந்த தமது தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த உறுப்­பினர் ஒரு­வரால், உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் மூவ­ருக்கு சிலு­வையில் கட்­டப்­பட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றங்கள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

மேற்­படி புகைப்­ப­டங்கள் லிபி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலம்­பெற்று விளங்கும் சிர்ட் நகரில் பட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

ரோமில் இடம்­பெற்ற மேற்­கு­லக நாடு­களின் தலை­வர்­களின் கூட்­டத்தில் லிபி­யா­வி­லுள்ள ஐ.எஸ். தீவி ­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக நேரடி நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்கு அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் ஜோன் கெரி வலி­யு­றுத்­திய தினத்­தி­லேயே இந்த புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அவற்றில் ஒரு புகைப்­ப­டத்தில் சக்­கர நாற்­கா­லியில் அமர்ந்­தி­ருந்த தீவி­ர­வா­தியின் அருகில் நப­ரொ­ருவர் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்குத் தயா ­ராக மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்­கிறார்.

இரண்­டா­வது புகைப்­ப­டத்தில் பிறி தொருவர் சிலுவை போன்ற கட்­ட­மைப்பில் கட்­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கிறார்.

அவ­ரது உடல் முழு­வதும் இரத்­த­மாகக் காணப்­பட்­ட­துடன் அவ­ரது உடலில் அவரை உளவு பார்த்த ஒரு­வ­ராக குற்­றஞ்­சாட்டும் வாச­கத்தைக் கொண்ட குறிப்­பொன்று ஒட்­டப்­பட்­டி­ருந்­தது. அதே­ச­மயம் மூன்­றா­வது புகைப்­ப­டத்தில் எது­வித குறிப்பும் ஒட்­டப்­ப­டாமல் ஒருவர் சிலுவையில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.

சிலுவையில் கட்டப்பட்ட அந்த இருவரும் மேற்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்ட போது உயிருடன் இருந்தார்களா இல்லையா என்பது அறியப்படவில்லை.

உளவுதண்டனைபார்த்தமரணமூவருக்குலிபியாவில்
Comments (0)
Add Comment