வட கொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை: ஜப்பான் கண்டனம்

வட கொரியா நடத்தியுள்ள ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது வடகொரியாவின் தற்போதைய நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலானது என்று குறிப்பிட்டுள்ளார்.

 இத்தகைய செயலை ஜப்பான் ஒரு போதும் பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ள அபே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில், இந்தப் பிரச்னையை நேச நாடுகளின் உதவியோடு எழுப்பப்போவதாகவும் கூறியுள்ளார். புதன் கிழமை காலை ஹைட்ரஜன் குண்டு வெடிப்புச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா அறிவித்தது.

சோதனைஜப்பான் கண்டனம்வட கொரியாஹைட்ரஜன் குண்டு
Comments (0)
Add Comment