அந்த ஆத்திரத்தில், தன்னுடைய முன்னாள் சக ஊழியர்கள் மீது அவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், ஒரு பெண் ஊழியர் உள்பட 5 பேர் பலியானார்கள். பின்னர், அந்த நபர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. இதற்கும், பயங்கரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.