Designed by Iniyas LTD
இத்தாலி வீரரை நாடு செல்ல அனுமதிக்க வேண்டி முறையீடு!
ஐ.நா. நடுவர் மன்றம் தீர்ப்பின்படி தங்கள் நாட்டு கடற்படை வீரர்களை தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இத்தாலி முறையீடு செய்துள்ளது.கேரள கடலோர பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி மீன்பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் மீது, அந்த வழியாக சென்ற இத்தாலி கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் என கருதி சுட்டுக்கொன்றதாக இத்தாலி கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து லத்தோர் மற்றும் ஜிரோன் என்ற 2 இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை கைவிடுமாறு இத்தாலி அரசு தொடர்ந்து விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
இத்தாலிய கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக்கோளாறு காரணமாக ஏற்கெனவே இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் மற்றொரு கடற்படை வீரரான சால்வடோர் கிரோனி என்பவரை இத்தாலிக்கு அனுப்ப இந்திய அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே, இத்தாலி இந்த விவகாரத்தை ஐநா நிரந்தர சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்திடம் எடுத்துச்சென்றது.
இந்த விவகாரத்தில், இந்தியா, இத்தாலி மீனவர்களை விடுவிக்க வேண்டும் ஐநா நடுவர் மன்றம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இத்தாலி சார்பில் முறையீடு சம்மன் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஐ.நா நடுவர் மன்ற தீர்ப்பு படி தங்கள் நாட்டு கடற்படை வீரரை தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இத்தாலி கடற்படை வீரர் சல்வட்டோர் கிரோன் விரைவில் தாயகம் திரும்புவார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, இத்தாலியின் கோரிக்கையை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை மே 26-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.