தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம் !

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது.

கடைசியாக 1993-ல் இலங்கை மண்ணில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா. அதன்பிறகு கடந்த 22 ஆண்டுகளாக வெல்லாத நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் வென்று அந்த குறையைத் தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது கோலி தலைமையிலான இளம் இந்திய அணி.

kohli_2527033f

கடந்த போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் கேப்டனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த கோலி, இந்தப் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி கேப்டனாக ஒரு தொடரை வெல்வதில் மிகுந்த முனைப்போடு இருக்கிறார். 5 பவுலர்களுடன் களமிறங்குவது என்ற கோலியின் உத்திக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் கடந்த இரு போட்டிகளிலும் இலங்கையின் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்தது.

Comments
Loading...