Designed by Iniyas LTD
சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மீது மஹிந்த குற்றசாட்டு
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சில அதிகாரிகளின் செயற்பாடு குறித்து கவலையடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களமானது அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். பிலிமத்தலாவ நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.