Designed by Iniyas LTD
சண்டையை வேடிக்கை பார்த்த பெண் சிறையில் அடைப்பு!
திருகோணமலை – தெவனிபியவர பகுதியில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவரை நேற்று (01) கைது செய்துள்ளதாக ஸ்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சண்டையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த இளம் பெண் ஒருவர், மண்வெட்டியால் ஒருவரை தாக்கியுள்ளார், இதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சண்டையில் மண் வெட்டியால் தாக்குதலுக்கு உள்ளானவர் மொறவெவ – தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த டி.எம். எதிரிசிங்ஹ (48வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இருவர் சண்டையிட்ட போது அதை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், மண் வெட்டியால் தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நிலையில் எதிரிசிங்ஹ என்பவர், மஹதில்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு