Designed by Iniyas LTD
சுண்டிக்குள கடலில் 9 தமிழக மீனவர்கள் கைது!
சுண்டிக்குளம் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி ஊடுருவிய தமிழக மீனவர்கள் 9 பேர் ஒரு படகுடன் நேற்று இரவு ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய இராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த ஓர் படகில் மீனவர்கள் கடற்ழொலிக்காக புறப்பட்ட நிலையில் இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் பிரதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒப்படைக்கப்படும் மீனவர்கள் இன்றைய தினமே நீதிமன்றில் ஆயர் செய்யப்படுவார்கள் என தெரியவருகிறது.