தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பட்டம் விட்டு விளையாடிகொண்டிருந்த சிறுவன் பலி!

Untitled-2-300x200பலப்பிட்டிய பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

15 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் விட்ட பட்டம் மாதுருகங்கையில் வீழ்ந்துள்ளது. அதனை எடுக்க முயற்சித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலப்பிட்டிய ராகுல வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...