Designed by Iniyas LTD
இராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தியின் 22 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..
இராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்.செம்மணியில் இடம்பெறவுள்ளது.
செம்மணிப் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
