Designed by Iniyas LTD
ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பது காலந்தாழ்த்தும் முயற்சி- ரோஹண ஹெட்டியாரச்சி ..
அரசாங்கம் தொடர்ந்து மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கே முயற்சிப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அளவில் 6 மாகாணசபைகளின் நிர்வாக நடவடிக்கைகள் ஆளுநர்களின் அதிகாரத்துக்கு சென்றுள்ள நிலையில்,
முடிவுற்ற மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 6 மாகாணசபைகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு மாறாக 9 மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் சாதகமாக முடிவான இருப்பினும், நடைமுறையில் சிக்கலுக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரே தினத்தில் தேர்தல் இடம்பெறுமாயின் அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும்,
மாறாக எஞ்சியுள்ள மாகாணசபைகளும் கலைக்கப்படும் வரை தேர்தல் காலந்தாழ்த்தப்படுமாயின் அனைத்து தேர்தல் நிர்வாக பிரிவுகளும் அசௌகரியத்தை சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நடைமுறைக்கு சாத்தி யமான ஒரு முறையில் கால எல்லை முடிவுற்றுள்ள வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.