Designed by Iniyas LTD
காணாமல்போனோர் அலுவலகம் தேவையில்லை – முல்லை மக்கள் போராட்டம்
காணாமல்போனோர் அலுவலகம் என்ற ஒன்று தேவையில்லை என தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் அலுவகம் வரை சென்று முடிவடைந்தது. போராட்டத்தின் முடிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை காணாமல்போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.