தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சம்பூர் கடற்படை முகாம் அகற்றப்படுவது உறுதியாம்!

1-130சம்­பூரில் காணப்­படும் பிர­தான மூன்று கடற்­படை முகாம்­களில் ஒன்றை மட்­டுமே அர­சாங்கம் இடமாற்றம் செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் குறித்த இட­மாற்றம் கார­ண­மாக எமது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு எவ்­வித அச்­சு­றுத்­தல்­களும் ஏற்­படப் போவ­தில்லை என ஸ்ரீலங்கா  பிர­தி­ய­மைச்சர் அஜித். பி. பெரேரா உறு­தி­ய­ளித்தார்.

அத்­துடன் முன்­னைய ஆட்­சிக்­கா­லத்­தின்­போது கைச்­சாத்­தி­டப்­பட்டு இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள சம்பூர் அனல் மின் நிலைய ஒப்­பந்தம் திருத்தம் செய்­யப்­பட்டு மீளவும் கைச்­சாத்­தி­டப்­படும் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

சம்பூர் அனல்மின் நிலையம் நிறு­வப்­ப­டு­வ­த­னூ­டாக சுற்றுச் சூழ­லுக்கு எவ்­வி­த­மான பாதிப்பும் ஏற்­ப­டாது. மேலும் இதன்­போது எமக்­கெ­தி­ராக எழும் எந்­த­வொரு அழுத்­தத்­துக்கும் அஞ்­ச­போ­வ­தில்லை என்றும் பிர­தி­ய­மைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முனனாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தின்­போது சம்­பூரில் அனல்மின் நிலை­ய­மொன்றை நிர்­மா­ணிக்கும் முக­மாக இந்­தி­யா­வுடன் ஒப்­பந்தம் ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தது. குறித்த ஒப்­பந்­தத்­திற்கு எதி­ராக நாட்டில் பெரும் எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இதன்­கா­ர­ண­மாக சம்பூர் அனல்மின் நிலைய பணிகள் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­துள்ள நிலையில் குறித்த ஒப்­பந்­தத்தில் உள்ள பார­தூ­ர­மான அம்­சங்கள் மீள்­தி­ருத்தம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதன்­படி சம்பூர் அனல்மின் நிலை­யத்­தினை நிர்­மா­ணிப்­ப­தற்­கான புதிய ஒப்­பந்தம் இந்­தி­யா­வுடன் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

குறித்த செயற்­றிட்­டத்­துக்­காக இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்­கு­மி­டையே ஐம்­ப­துக்கு ஐம்­பது என்ற வகையில் சம­வு­ரிமை காணப்­ப­டு­கின்­றது. எனவே இரு­நா­டு­க­ளுக்­கு­மி­டையே உள்ள சம்­மந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரி­டையே இவ்­வ­ரு­டத்­திற்குள் கேள்­வி­மணு கோரப்­ப­ட­வுள்­ளது.

இத­னூ­டாக 500 மெகா வோல்ற் மின்­சா­ரத்­தினை பெற­மு­டியும் என எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்ற்து. மேலும் குறித்த திட்­டத்தின் நிர்­மா­ணப்­ப­ணி­களை 2022 ஆம் ஆண்டு நிறை­வு­செய்­யவும் எதிர்ப்­பார்த்­துள்ளோம்

குறித்த அனல்மின் நிலை­யத்­துக்கு 600 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செல­வி­டப்­படும். இத­னூ­டாக நாட்டில் நிலவும் மின் பற்­றாக்­கு­றையை முற்­றாக நிவர்த்தி செய்ய முடியும். மேலும் தற்­போது குறித்த திட்­டத்­திற்­கான சுற்­றாடல் சார் அனைத்து மதிப்­பீ­டு­களும் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் சூழ­லுக்கு எவ்­வித பாதிப்பு ஏற்­ப­டாது என்­பது தெளி­வா­கி­யுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் கழி­வுப்­பொ­ருட்கள் அகற்றல் தொடர்பில் விசேட மாற்று வழி­மு­றைகள் கையா­ளப்­படும். எனவே மக்­களின் எதிர்­கா­லத்­தினை மட்டும் கருத்­திற்­கொண்டே குறித்த திட்டம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. எனவே இந்த செயற்­றிட்டம் செயற்­ப­டு­கையில் எமக்­கெ­தி­ராக எழும் எந்­த­வொரு அழுத்­தத்­துக்கும் அஞ்­ச­போ­வ­தில்லை என்றார்.

கடற்­படை முகாம்கள்

சம்­பூரில் மூன்று பிர­தா­ன­மான கடற்­படை முகாம்கள் உள்­ளன. இவற்­றில்­ஒரு முகாம் மாத்­தி­ரமே இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

குறித்த முகாமை இட­மாற்றம் செய்­வ­தற்கு அங்­குள்ள கடற்­ப­டை­யினர் பூரண ஒத்­து­ழைப்பை எமக்கு வழங்க தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­தனர். எனவே தற்­போ­துள்ள முகா­மி­லி­ருந்து மூன்று கிலோ­மீற்றர் தூரத்தில் புதிய முகா­மினை நிர்­மா­ணிக்க தீர்­மா­னித்தோம். மேலும் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் சம்பூரில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும் இங்கு நாம் பயணித்த போது புதிய பிரச்சினைகள் ஏற்படவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறும் தென்படவில்லை. ஆகவே சம்பூர் கடற்படை முகாம் இடமாற்றம் செய்வதனூடாக தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என்றார்.

Comments
Loading...