Designed by Iniyas LTD
சிறீலங்காவிற்கான தனது சேவையை நிறுத்தியுள்ளது பிரிட்டிஷ் எயார்வேஸ்
இலங்கை செல்லும் தமது விமான பயணங்களை ரத்துச் செய்ததில் எந்தவிதமான அரசியல் பிரச்சினைகளுமில்லை என பிரிட்டிஷ் எயார்வேஸ் தெரிவித்துள்ளதுடன் இலாபம் தொடர்பான பிரச்சினை காரணமாகவே விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுஅடுத்த ஆண்டு முதல் இலங்கைக்கான தமது விமான சேவைகள் இரத்துச் செய்யப்படும் என பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து தகவல் வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய முகாமையாளர் கிறிஸ்டோபர் ஃபோர்டைஸ்,
வணிக நோக்கத்தின் அடிப்படையிலேயே பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு தனது விமான சேவைகளை நடத்தி வருகிறது. அவ்வாறான நிலையில் இலாபம் தொடர்பான பிரச்சினை காணப்படுவதன் காரணமாகவே கொழும்பு மற்றும் லண்டனுக்கிடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றார்