Designed by Iniyas LTD
சிறுமியை சிகரெட்டால் சுட்டு கொடூரமாக கொலை!
பொகவந்தலாவை ஆல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது யுவதி ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியை நேற்றுக் காலை 8.30 மணி அளவில் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோது உயிரிழந்த நிலையில் சடலமாக கொண்டு வரப்பட்டதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த யுவதியின் உடல் மற்றும் கால், கை போன்ற பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாகவும் சிகரட்டினால் சூடுவைக்கபட்ட காயங்கள் காணப்படுவதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.