Designed by Iniyas LTD
தமிழ் மக்களுக்காக பதவியையும் தூக்கி எறிவேன் -மனோகணேசன்…
தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரத் தயாராக இருப்பதாக
அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் கலை, கலாசாரம் பாதுகாக்கப்பட்டு இருப்பைத் தக்க வைப்பதற்குக் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கம்பன் விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.