தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பௌத்த மதத்­துக்­கும் சிங்­கள மாண­வர்­க­ளின் பல்­க­லைக் கழக கல்­விக்­கும் வடக்­கில் எந்த வித­மான சுதந்­தி­ர­மும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்­துக்­கும் சிங்­கள மாண­வர்­க­ளின் பல்­க­லைக் கழக கல்­விக்­கும் வடக்­கில் எந்த வித­மான சுதந்­தி­ர­மும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  மல்­வத்து பீடத்­தின் அநு­நா­யக்க திவன்­கும்­புரே ஸ்ரீ விம­ல­தர்ம தேரர் தெரி­வித்துள்ளார்.

கண்­டிக்குச் சென்­றுள்ள முன்­னாள் பாது­காப்பு செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச மல்­வத்து மற்­றும் அஸ்­கி­ரிய பீடங்­க­ளுக்குச் சென்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­துக்கு சென்று விகாரை அமைக்க முடி­ய­வில்லை என்றும்,  அங்கு புத்­தர் சிலை வைக்க முடி­ய­வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் . சிங்­கள மாண­வர்­க­ளுக்கு யாழ்ப்­பாண பல்­க­லைக் கழ­கத்­தில் கல்வி கற்க முடி­யா­த­ள­வுக்கு அங்­குள்­ள­வர்­கள் நெருக்­க­டி­க­ளை­யும் அழுத்­தங்­க­ளை­யும் கொடுக்­கின்­ற­தாகவும்,  இவை குறித்து அதி­கா­ரத்­தில் உள்­ள­வர்­கள் கவ­னத்­திற் கொள்­ள­வில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...