தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் இந்துவின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு.

யாழ் இந்துவின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட வீரனுமான வாகீசன்  இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக 3 வருடங்களின் பின் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முதலாவது வீரனாக இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இவர் தெரிவாகியிருந்தார். 2011 தொடக்கம் 2014 வரை தொடர்ந்து 4 வருடங்கள் இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்தார்.

மீண்டும் 3 வருங்களின் பின் இவ் ஆண்டு (2018) இலங்கை கூடைப்பந்தாட்ட அணிக்காக தெரிவாகியுள்ளார்.

இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு கூடைப்பந்தாட்ட வீரன் வாகீசன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 25ம் திகதி வங்களாதேசத்தில் நடைபெற இருக்கும்  தெற்காசிய  கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக வாகீசனும் விரைவில் வங்களாதேசம் செல்லவுள்ளார்.

Comments
Loading...